கோவை:கோவையில், ஒரே நாளில் 128 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.மாவட்டத்தில் நேற்று புதிதாக, 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டது.
மொத்த பாதிப்பு 51 ஆயிரத்து 791 ஆக உயர்ந்தது.கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 67 வயது முதியவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை 643 ஆக உயர்ந்தது.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த, 128 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 50 ஆயிரத்து 234 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 914 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE