ஊட்டி:மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களின் தனி திறனை மேம்படுத்தும் வகையில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள், இளைஞர் தேசிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், கோவிட்--19 சுகாதார விதி முறைகளுக்கு உட்பட்டு போட்டி நடத்தப்படுறது.மாவட்ட அளவிலான போட்டிகள், டிச., 29, 30; மாநில அளவிலான போட்டி, ஜன., மாதம், 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை; தேசிய அளவிலான போட்டி, 12 முல் 19ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்போட்டிக்காக நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை அணுகலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE