ஊட்டி:நீலகிரியின் பல்வேறு பகுதிகளிலும், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.ஊட்டி, பழைய அக்ரஹாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று, காலை, 6:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, அங்குள்ள ஆஞ்சநேயருக்கு பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது.கொரோனா பாதிப்பு காரணமாக, சொர்க்க வாசல் திறந்த உடன் சிறிது துாரம் மட்டுமே சுவாமி வீதி உலா நடந்தது. இதில், பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.மேலும், ஊட்டி, வேணு கோபால் சுவாமி கோவில், எச். பி.எப்., பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE