சோழவந்தான் : சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஜூம்ஆ தொழுகை பள்ளிவாசலில் மதரஸா ஆண்டு விழா, மதநல்லிணக்கம், மீலாது நபி, பைத்துல்மால் மற்றும் மக்தப் மதரஸா பாடத்திட்ட துவக்கம் என ஐம்பெரும் விழா நடந்தது. பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் தலைமை வகித்தார்.
ஹாஜி யூசுப், நாட்டாமை நாகூர் பிச்சை, செயலாளர் நாகூர் அனிபா முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் காதர் மைதீன் வரவேற்றார்.சமூக சிந்தனை, தேசப்பற்று, தொழுகை குறித்து மதரஸா மாணவர்கள் பேசினர். கிராமத் தலைவர் பாலசுப்ரமணியன், ஊராட்சி தலைவர் சுகுமாறன், ஐ.ஓ.பி., வங்கி மேலாளர் வீரராகவன் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளிவாசல்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. பொருளாளர் சலீம்சேட் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE