மதுரை : சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்கம் (எம்.எம்.பி.ஏ.,) தலைவர் கிருஷ்ணவேணி, பொதுச் செயலாளர் இளங்கோ அனுப்பிய கடிதம்:கொரோனாவால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் காணொலியில் விசாரணை நடக்கிறது.
முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். காணொலிக்கு இணையதள இணைப்பு சரியாக கிடைப்பதில்லை. அரசு, தனியார் அலுவலகங்கள், தியேட்டர்கள், மால்கள், கோயில்கள் போன்றவை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் ஜன., 4 முதல் நேரடி விசாரணையை துவக்க வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வழக்கறிஞர்கள் ஒத்துழைக்கத் தயார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE