திண்டுக்கல் : மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 10 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு மாநில, தேசிய அளவிலான இரண்டு கட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மாவட்டத்தில் 2753 மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு நாளை (டிச.27) 30 மையங்களில் வைத்து முதற்கட்ட தேர்வு நடக்க உள்ளது. மனத்திறன் மற்றும் கற்றல் திறன் என 2 பிரிவுகளாக காலை 9:00 முதல் 11:00 மணி வரை, 11:30 முதல் 1:30 மணி வரை நடக்கிறது. கொரோனா காரணமாக, ஒரு அறையில் 10 மாணவர்கள் வீதம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE