குஜிலியம்பாறை : ஊராட்சி அலுவலகத்தில் தரையில் அமர வைப்பதாக கூறி பொது மக்களுடன் துணைத்தலைவர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.கு
ஜிலியம்பாறை ஒன்றியம் வாணிக்கரை ஊராட்சி துணைத் தலைவர் பெருமாயி. இவரும் 3, 6 வது வார்டு உறுப்பினர்களும் ஆதிதிராவிடர் சமூகத்தினரே. ஊராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று ஓராண்டில் முறையான கூட்டங்கள் நடக்கவில்லை. தீர்மானங்களில் கையெழுத்து போடத்தான் அனுமதிக்கின்றனர். கூட்ட நேரத்தில் தரையில் அமர வைக்கின்றனர் எனக்கூறி இவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகூறி, துணைத்தலைவர் பெருமாயிஉள்பட பலர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப்பின் கலைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE