கொடைக்கானல் : கொடைக்கானல் நெரிசலுக்கு தீர்வே கிடைக்காததால் விடுமுறை நாட்களில் வாகனங்கள் அணிவகுப்பது தொடர்கிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறையால் நேற்று காலை முதலே கொடைக்கானல் டைகர் சோலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. ஏரிச் சாலை, மூஞ்சிக்கல், அண்ணாசாலை, அப்சர்வேட்டரி ரோடு என நகரின் பிரதான ரோடுகளில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. பலமணி நேர போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் பயணிகள் சுற்றுலாத் தலங்களை வெகுவாக ரசித்தனர்.
குறைவான போலீசாரால் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு தீர்வுகாண சில மாதங்களுக்கு முன் தனியார் வாகன நிறுத்தத்திற்கு நகராட்சி அழைத்தும் யாரும் வரவில்லை. ரோட்டோரம் காலாவதியான வாகனங்களை நிறுத்த கூடாது என அறிவித்தும் பலனில்லை. எதிர்வரும் சீசனுக்குள் இங்குள்ள போக்குவரத்து நெரிசலை தீர்க்க நிரந்தர வழிகாண வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE