அமேதி: காங்., எம்.பி., ராகுல், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அமேதியில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ராகுல் பொய்களை அள்ளி வீசி வருகிறார். விவசாயிகளிடம் நீலிக்கண்ணீர் வடித்து, அவர்களை தவறாக வழிநடத்துகிறார். அவரது தங்கையின் கணவர் ராபர்ட் வதேரா, விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்.

ராகுலுக்கு துணிவிருந்தால், புதிய வேளாண் சட்டங்கள் குறித்து என்னிடம் விவாதம் நடத்தட்டும். ராகுலின் குடும்பத்தால், இவ்வளவு காலமாக விவசாயிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE