சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையால் விளைந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியில் ஆடியில்கிணற்று தண்ணீர் மூலம் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. கதிர் முற்றிய நேரத்தில் மழை பெய்ததால் சில இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்துள்ளது. விளைந்த பயிர்களை அறுவடை செய்யும் பணி துவங்கியுள்ளது.பெரும்பாலான விவசாயத் தொழிலாளர்கள் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்வதால் அறுவடைப்பணிக்கு கூலியாட்கள் கிடைக்கவில்லை. ஓரிரு அறுவடை இயந்திரங்களே இப்பகுதியில் முகாமிட்டுள்ளது. அதுவும் ஈரமாக உள்ள நிலங்களுக்குள் இறங்கும் போது டயர்கள் பதிந்து கொள்கிறது.
இதனால் இப்பகுதிக்கு இயந்திரங்களை கொண்டுவர அதன் உரிமையாளர்கள் மறுக்கின்றனர்.சங்கிலியால் இணைக்கப்பட்ட டயர்கள் மூலம் ஓடும் இயந்திரங்களால் மட்டுமே ஈரமான நிலங்களில் அறுவடை செய்யமுடியும். எனவே விவசாயத்துறை அலுவலர்கள் இந்த இயந்திரங்களை சிங்கம்புணரி பகுதிக்கு கொண்டு வந்து அறுவடைக்கு உதவ விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE