மொடக்குறிச்சி: தேசிய அளவிலான மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டிக்கு, கஸ்பாபேட்டை வாலிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொடக்குறிச்சி, கஸ்பாபேட்டை, வீரப்பம்பாளையத்தை சேர்ந்த மோகன் மகன் சிவக்குமார், 26; கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டார். பல பரிசு வென்றுள்ளார். ஏழ்மை குடும்பம் என்பதால், விளையாட்டு உபகரணமின்றி தவித்தார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியிடம், கடந்த மாதம் உதவி கேட்டார். உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கினார். இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், மாநில அளவிலான மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணியில் இடம் பிடித்தார். இதில் சிறப்பாக விளையாடி, அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இதனால் தேசிய போட்டிக்கு சிவக்குமார் தேர்வாகியுள்ளார். எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியை, நேற்று சிவக்குமார் சந்தித்து, வாழ்த்து பெற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE