ஈரோடு: இங்கிலாந்தில் இருந்து, ஈரோடு மாவட்டத்துக்கு, 14 பேருக்கு கொரோனா இல்லை என, பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது: கொரோனா வைரஸ் உருமாறி, இங்கிலாந்தில் புதிய வடிவத்தில், வேகமாக பரவுகிறது. இதனால், அந்நாட்டுக்கான விமான சேவை தடை செய்யப்பட்டது. அங்கிருந்து கடந்த, 15 நாட்களில், தமிழக்துக்கு வந்தவர்களை தனிமைப்படுத்தி, கண்காணிக்கிறோம். இதன்படி ஈரோடு மாவட்டத்துக்கு கடந்த, 15க்குப்பின் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த, 22 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களது குடும்பத்தார், தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த, 22 பேரில், 14 பேருக்கு நேற்று பரிசோதனை முடிவில், 'நெகட்டிவ்' என வந்தது. மீதி எட்டு பேருக்கு இன்று மாலை முடிவு தெரியவரும். இருப்பினும், அவர்கள் அனைவரும், 14 நாட்கள் தனிமையில் இருப்பது அவசியம். இவ்வாறு சுகாதாரத்துறையினர் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE