அந்தியூர்: ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகேயுள்ள, பருவாச்சி, நாயக்கனூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரின், 17 வயது மகள், இன்ஜினியரிங் கல்லூரி மாணவி. கடந்த, 20ல் மாயமானார். பவானி அனைத்து மகளிர் போலீசில், ராமசாமி புகார் தந்த நிலையில், மகளை கண்டுபிடித்து தரக்கோரி, 23ல் மறியலில் ஈடுபட்டார். ஆப்பக்கூடல் போலீசார், தனிப்படை அமைத்து தேடினர். பவானியில் வாலிபர் ஒருவருடன், மாணவியை நேற்று பிடித்தனர். மாணவியுடன் இருந்தது, காடப்பநல்லூரை சேர்ந்த விக்னேஷ், 21; என தெரிந்தது. மைனர் பெண்ணை கடத்திய புகாரில், அவரை போக்சோவில் கைது செய்து, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE