சேலம்: தமிழகத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருப்பினும், அந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்தது. நேற்று, செவ்வாய்ப்பேட்டையில், சுகாதார அலுவலர்கள் அடங்கிய, மூன்று கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர். அதில், 38 கடைகளிலிருந்து, 550 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 63 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, கடும் நடவடிக்கை தொடரும் என, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE