அரூர்: அரூரில், முதல்வர் பழனிசாமியை கண்டித்து, கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை சார்பில், சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர், கச்சேரிமேடு, தாலுகா அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், முதல்வர் பழனிசாமியை கண்டித்து, தர்மபுரி கிழக்கு மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை சார்பில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'கவுண்டர், பிள்ளை, முதலியார், செட்டியார் சமுதாயங்களின் வேளாளர் ஜாதி பெயரை, அரசியல் ஆதாயத்திற்காக பிற சமுதாயங்களுக்கு, தாரைவார்த்த முதல்வர் பழனிசாமியை வன்மையாக கண்டிக்கிறோம்' என கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE