வேலூர்: ''கிராம சபா கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதால், எங்கள் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது,'' என, தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே சேர்க்காட்டில், பொன்னையாற்றில் கட்டப்பட்ட மேம்பாலம் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இப்பணிகளை, தி.மு.க., பொதுச் செயலாளரும், காட்பாடி எம்.எல்.ஏ.,வுமான துரைமுருகன் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டு நாட்களாக, தி.மு.க., நடத்திய கிராம சபா கூட்டத்திற்கு, பொது மக்கள் திரண்டு வந்ததை கண்டு, அ.தி.மு.க.,வுக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைத்து, கூட்டத்திற்கு தடை போட்டுள்ளனர். தடை எங்கள் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது. கிராம சபா கூட்டம் என்ற பெயரை மாற்றி, மக்கள் சபை கூட்டம் என்று நடத்துவோம். தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. கூட்டணி பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. ரஜினி கட்சி ஆரம்பித்தால், கட்சியின் பெயரை பேப்பரில் பார்த்து தெரிந்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE