உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 35; விவசாயி. இவரது மனைவி தீபா, 31. இவர்களது குழந்தைகள் கணபதி, 12; முருகன், 11; சமீரா, 9; யோகேஷ், 7.இவர்களில் சமீரா, யோகேஷ் இருவரும், நேற்று மதியம், 2:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள சிவன் கோவில் குளத்தில் குளித்தபோது மூழ்கினர். குழந்தைகளைக் காணாததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது, குளத்தில் சமீரா, யோகேஷ் இறந்து கிடந்தது தெரிந்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement