கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில், நேற்று அதிகாலை சொர்க்க வாசல், திறப்பு விழா நடந்தது. கரூர் நகரில் பிரசித்தி பெற்ற, பண்டரிநாதன் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு விழாவையொட்டி, பகல்பத்து உற்சவம் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு மோகினி அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. அதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, சுவாமி திருவீதி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை, டிரஸ்டிகள், கமிட்டியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
* கிருஷ்ணராயபுரம், லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில், சுவாமி, சிறப்பு அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* மகாதானபுரம் பஞ்., அக்ரஹாரத்தில் உள்ள, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் செர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பரமபத வாசல் வழியாக உற்சவர் சுவாமி தேவியுடன் காட்சியளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE