கரூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட, பா.ஜ., பட்டியல் அணி சார்பில், தலைவர் முருகேஷ் தலைமையில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில், ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட, பா.ஜ., தலைவர் சிவசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ரத்த தானம் வழங்கினர். பா.ஜ., பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் தலித் பாண்டியன், மாவட்ட, பா.ஜ., பொதுச்செயலாளர் நகுலன் உள்பட பலர் உடனிருந்தனர்.
* அரவக்குறிச்சியில், பா.ஜ., சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வாஜ்பாய் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட பல்நோக்கு திட்டங்கள், அதன் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை மக்களிடையே எடுத்துரைத்து இனிப்பு வழங்கினர். ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர்கள் பரணி, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE