கிருஷ்ணராயபுரம்: திருக்காம்புலியூரில், மின் கசிவு காரணமாக தீப்பிடித்து வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. கிருஷ்ணராயபுரம் அடுத்த, திருக்காம்புலியூரைச் சேர்ந்தவர் ஜோதி முருகம்பாள் 50. நேற்று காலை, 8:30 மணி அளவில் வீட்டில் இருந்த மின் ஒயரில் மின்கசிவு காரணமாக, 'டிவி' வெடித்தது. இதில் தீ பரவத் தொடங்கியது. பிரிட்ஜ், மிக்ஸி, டேபிள் மற்றும் ஓடுகள் சேதமடைந்தன. முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். மாயனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement