கரூர்: கரூர் அருகே, வெள்ளாளப்பட்டியில் கழிவு நீர் கால்வாய் செல்கிறது. தற்போது, வாய்க்காலில் பல இடங்களில், மண் அடைப்பு உள்ளது. மேலும், அதிகளவில் செடிகள் முளைத்துள்ளன. தற்போது, கரூர் பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால், அடைப்பு காரணமாக கால்வாயில் கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்லாமல் தேங்கியுள்ளது. அதில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால், அந்த பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகளில், வசித்து வரும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, கால்வாயை தூர் வார வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE