பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில், இரு இளம்பெண்கள் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். பள்ளிபாளையம் அருகே, தில்லைநகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளியின், 19 வயது மகள். தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மதியம், வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு, வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
* பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவரின், 19 வயது மகள், ஆலாம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம், வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. இரு புகார்கள் மீதும், வழக்கு பதிந்து, பள்ளிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE