சென்னை:அரசு கட்டடங்களுக்கு, அடுத்தடுத்து அடிக்கல் நாட்டு விழாவை நடத்த உள்ள நிலையில், அதற்கான பணிகளில் பொதுப்பணி துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மார்ச்சில் நடந்த சட்டசபையில், முதல்வர் பழனிசாமி., 110 விதியின் கீழ், பல்வேறு கட்டடங்கள் கட்டும் அறிவிப்பை வெளியிட்டார். மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், தங்களது துறைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தனர்.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த, முதல்வர் முடிவு செய்துள்ளார். கட்டட பணிகளுக்கும், அடுத்தடுத்து அடிக்கல் நாட்டு விழா நடத்தவுள்ளார். இதையடுத்து, புதிய கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு பெறுதல், திட்ட மதிப்பீடு தயாரித்தல், ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்தல் போன்ற பணிகளில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE