சென்னை:முதல்வர் பழனிசாமி., நாளை மறுதினம், நாமக்கல் மாவட்டத்தில், தன் தேர்தல் பிரசாரத்தை தொடர்கிறார்.
அ.தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், இன்று சென்னையில் நடக்க உள்ளது. பொதுக் கூட்டம் முடிந்த பின், முதல்வர் பழனிசாமி., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், தனித்தனியே தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை துவக்கிய முதல்வர், நாளை மறுதினம் நாமக்கல் மாவட்டத்தில் பேசுகிறார். பின், 30ம் தேதி சேந்தமங்கலம் தொகுதியிலும், திருச்சி மாவட்டத்திலும் பிரசாரம் செய்ய உள்ளார். வரும், 31ம் தேதியும், திருச்சி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE