சிவகங்கை:மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டிச.,30ல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
இன்று(டிச.,27) திருச்சியில் இருந்து பிரசாரத்தை துவக்கும் கமல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், புதுக்கோட்டை வழியாக சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். டிச.,30 காலை 11:40 மணிக்கு திருப்புத்துாரில் வேனில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மதியம் 12:15 மணிக்கு சிவகங்கையில் நடக்கும் உள் அரங்கு நிகழ்ச்சியில் பேசுகிறார்.
மாலை 4:30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, மாலை 6:15 மணிக்கு பரமக்குடியில் பிரசாரம் செய்கிறார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இரவு 8:00 மணிக்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE