பாகூர்: காட்டுக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள மின் கம்பத்தின் மீது, செடி, கொடிகள் படர்ந்துள்ளதால், மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.புதுச்சேரி - கடலுார் சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இங்குள்ள, காட்டுக்குப்பம் கிராமத்தில் கந்தன்பேட் சந்திப்பு அருகே சாலையின் கிழக்குபகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த மின்பாதையில் உள்ள மின் கம்பம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், செடி கொடிகள் வளர்ந்து, கம்பத்தின் மீதும் படர்ந்து மின் கம்பிகள் மீதும் படர்ந்து கொண்டே செல்கிறது.இதனால்,மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்பு உள்ளதால், அதன் அருகில் செல்பவர்களும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும், மின்சார தாக்குதலுக்குள்ளாகும் அபாயம் உள்ளது.எனவே, மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றிட மின் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE