ராமநாதபுரம் : ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில், பெயரளவில் செயல்படும் கைரேகை பதிவு (பயோ மெட்ரிக்) மிஷின்களை ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.,16 முதல் பயோமெட்ரிக் மிஷினில் கைரேகை பதிவு அடிப்படையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. சர்வர் பிரச்னையால் பெரும்பாலான கடைகளில் கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்யமுடியவில்லை.இதற்கு கண்டனம் தெரிவித்து ராமநாதபுரம் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்சங்கத்தினர் நேற்று தாலுகா அலுவலகத்தில்குடிமைப் பொருள் தாசில்தாரிடம் பயோமெட்ரிக் மிஷினை ஒப்படைக்க வந்தனர். தாசில்தார் இல்லாததால் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து சங்க மாவட்ட தலைவர் தினகரன், மாவட்ட செயலாளர் ஞானசேகரன் கூறியதாவது: சர்வர் சரிவர கிடைக்காததால் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது இதனால் ரேஷன் பொருட்கள் வழங்க தாமதம் ஏற்படுகிறது. தற்போது பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க வேண்டியுள்ளது, ஆகையால் சர்வர் சரியாகும் வரை பழைய முறையில் பொருட்களை வழங்க அரசு அனுமதி வழங்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE