ராமேஸ்வரம் : 16ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை யொட்டி ராமேஸ்வரம்,பாம்பன் கடலில் மீனவர்கள் மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.
2004 டிச.,26ல் தமிழகத்தில் சுனாமி பேரலை தாக்கியதில் நாகை,கடலுார், கன்னியாகுமரியில் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை நினைவு கூறும்விதமாகவும், சுனாமியில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி ஆண்டுதோறும் மீனவர்கள், தமிழக கடலில் மலர்துாவி அஞ்சலி செலுத்துவர்.நேற்று ராமேஸ்வரம்துறைமுகம், பாம்பன் கடற்கரையில் ஏராளமான மீனவர்கள், பெண்கள் மலர்துாவி அஞ்சலி செலுத்தி, பிரார்த்தனை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE