கண்டமங்கலம்: 'தி.மு.க.,வினரின் கனவை தவிடு பொடியாக்குவது உங்களிடம்தான் உள்ளது' என அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசினார்.
கண்டமங்கலத்தில், வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசியதாவத:நம்மிடம் ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் தொடர்ந்து இருக்குமானால் நம்மை யாராலும் வெல்ல முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், வரும் சட்டசபைத் தேர்தலில் எதையாவது செய்து ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என தி.மு.க.,வினர் கனவு காண்கின்றனர்.அந்தக் கனவை தவிடு பொடியாக்குவது உங்களிடம் உள்ளது. அ.தி.மு.க., மீது மக்களுக்கு மரியாதையும், நல்ல அபிப்ராயமும் உள்ளது. அதனை நீங்கள் ஓட்டுகளாக மாற்ற வேண்டும்.தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெ., வழியில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நீங்கள் ஒற்றுமையாக இருந்து பாடுபட வேண்டும். கட்சிக்காக நீங்கள் உண்மையாக, கடுமையாக உழைத்தால் கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர், எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என எந்தப் பதவியும் உங்களைத் தேடிவரும்.இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE