விழுப்புரம்: தமிழ்நாடு முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்கம் சார்பில் அமைப்புக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இளங்கோ, சண்முகம், ராஜகுமாரன் முன்னிலை வகித்தனர். சுப்ரமணியன் வரவேற்றார். மாநில பொருளாளர் பிரபு, அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் அருணகிரி சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்களுக்கு நிர்ணயிக்கபட்டஊதிய விகிதத்தை மாற்றியமைத்து, முன்பெற்ற ஆபத்து ஈட்டுபடி சிறப்பு ஊதியம் தொடர வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE