சிவகங்கை : பிரிட்டனில் இருந்து சிவகங்கை வந்த 21 பேருக்கு கொரோனா தொற்று இல்லாததால், 14 நாட்கள் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
பிரிட்டன் பகுதியில் கொரோனா தொற்று அடுத்த கட்ட அலை வேகமாக பரவிவருகிறது. இதையடுத்து அங்கு வசித்தவர்களை சொந்தநாட்டிற்கு விமானம் மூலம் அனுப்பி வருகின்றனர். நவ.,25 முதல் டிச.,25 வரை பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களை பரிசோதனை செய்து, கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் தனி வார்டில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.பிரிட்டனில் இருந்து விமானம் மூலம் இம்மாவட்டத்தை சேர்ந்த 21 பேர் சிவகங்கை, திருப்புத்துார், காரைக்குடி பகுதிக்கு வந்துஉள்ளனர்.
அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் சளி மாதிரி பரிசோதனை மேற்கொண்டனர். இவர்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்தனர்.இதையடுத்து அவர்களை வீட்டு தனிமையில் 14 நாட்கள் இருக்குமாறு, வலியுறுத்தியுள்ளனர். மேலும், சுகாதாரத் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE