திண்டுக்கல் : திண்டுக்கல் ஓட்டு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் விஜலட்சுமி, டி.ஐ.ஜி., முத்துச்சாமி ஆய்வு செய்தனர்.
வரும் 2021 ல் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையம் அண்ணா பொறியியல் கல்லூரியில் அமையவுள்ளது.இதனையடுத்து அக்கல்லூரியில் கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் டி.ஐ.ஜி., முத்துச்சாமி நேற்று ஆய்வு செய்தனர். மின்னணு ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு கருவி, ஓட்டுப்பதிவு இயந்திரம், வைப்பு அறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் இயந்திரத்தை வைக்கவுள்ள பாதுகாப்பான இடம் குறித்து ஆய்வு செய்தனர். வருவாய் அலுவலர் கோவிந்தராசு, ஆர்.டி.ஓ., உஷா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், தேர்தல் தாசில்தார் சரவணன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE