பண்ருட்டி: பண்ருட்டி அருகே காணாமல் போன மனநலம் பாதித்த மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாபு; கூலி தொழிலாளி. இவரது மனைவி கமலா, 65; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த நவம்பர் 18ம் தேதி வீட்டில் இருந்து விழுப்புரம் மாவட்டம், பில்லுார் கிராமத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். பின் வீட்டில் இருந்தவரை காணவில்லை.இது குறித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து, கமலாவை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE