தேவகோட்டை: தேவகோட்டை பால்காவடியார் தெருவில் வசிப்பவர் சொர்ணக்காளை 38., பஸ் ஸ்டாண்ட் பின்புறம் கடை நடத்தி வருகிறார்.
மீன்கடை பணியாளர் அசாருதீன் 22. நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் டூவீலரில் வேகமாக சென்றுள்ளார். அசாரூதீனை சொர்ணக்காளை கண்டித்துள்ளார். மீண்டும் அங்கு வந்த அசாரூதின், சொர்ணக்காளையை கத்தியால் குத்தியுள்ளார். காயமடைந்த சொர்ணக்காளை காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சொர்ணக்காளையின் சகோதரர் பெரியண்ணன் போலீசில் புகார் செய்தார்.அசாரூதீனை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE