சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை தினக்கூலி தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 30 ஆண்டுகளாக தினக்கூலி தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர். 100க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர்.மீதமுள்ள தொழிலாளர்கள் 130 பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, சர்க்கரைத் துறை ஆணையர், தமிழக முதல்வருக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை.
எனவே, பணி நிரந்தரம் செய்யும் வரை நாளை முதல் வேலை நிறுத்தம் செய்து, ஆலை முதல்நுழைவாயில் முன்பு 130 தொழிலாளர்களும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE