புதுடில்லி:கொரோனாவுக்கான 'ஆக்ஸ்போர்டு' பல்கலையின் தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்த இந்தியாவில் விரைவில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.
பிரிட்டனில் 'அஸ்ட்ராஜெனெகா' நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலை இணைந்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி தயாரித்துள்ளன.இந்தியாவில் புனேவைச் சேர்ந்த 'சீரம்' நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரித்து வருகிறது.பிரிட்டனில் இந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு இன்னும் சில நாட்களில் அரசின் ஒப்புதல் கிடைக்கிறது.
இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்களின் உடல் நிலையை ஆய்வு செய்த பின் இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளிக்கும் என தெரிய வந்துள்ளது.அதனால் நம் நாட்டில் கொரோனாவுக்காக முதலில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி என்ற பெருமை ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பூசிக்கு கிடைக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE