திருப்போரூர் : மேலக்கோட்டையூர் வி.ஐ.டி., பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, நேற்று, இணைய வழியில் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூரில், வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில், இணையவழியில் பட்ட மளிப்பு விழா, நேற்று நடந்தது.பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், சேகர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்பராயன் பங்கேற்று, 2,039 மாணவ- - மாணவியருக்கு, இணையவழி மூலமாக பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார்.அப்போது, அவர் பேசியதாவது:தேசத்தை கட்டமைக்கும் பணியில், அனைவரும், தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.
நீங்கள் பெற்ற கல்வி, இந்த உலகத்து சவால்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையை தருகிறது.கல்வி, சூழ்நிலைக்கு ஏற்ற திறன் மற்றும் பொது முடக்கத்திற்கு பின், மீண்டும் எழும் உத்வேகத்தை தருகிறது. சுவாமி விவேகானந்தரின், 'எழுமின், விழுமின் குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்' என்ற கருத்துப்படி, உழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், துணை வேந்தர், இணைவேந்தர், பதிவாளர், கூடுதல் பதிவாளர், பேராசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE