பல்லாவரம் : பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் முடி திருத்தகம், அழகு நிலையங்கள், உரிமம் பெறுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி அறிக்கை:பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், முடித்திருத்தகம், அழகு நிலையம், மசாஜ் நிலையம் நடத்துவோர், நகராட்சி உரிமம் பெற வேண்டும். அதனால், குறிப்பிடப்பட்டுள்ள நிலையங்களை நடத்துபவர்கள், நகராட்சி ஆணையரிடம் இருந்து விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து, அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து, 30 நாட்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், தொழில் உரிமம் இன்றி செயல்படுவதாக கருதி, 'சீல்' வைக்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE