பழநி : பழநியில் ஓட்டல்களில் உணவுப் பட்டியல், சாலையோர கடைகளின் உணவுத் தரம் ஆகியவற்றில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
பழநியில் பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கிரிவீதியில் கடைகள் அதிகம் உருவாகி உள்ளது. பக்தர்கள் பெரும்பாலும் தனியார் ஓட்டல்கள், தள்ளுவண்டிக் கடைகளில் சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அடிவாரம், கிரிவீதி, பூங்காரோடு, அய்யம்புள்ளி வீதி, சன்னதி வீதி, அருள்ஜோதிவீதி, பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் செயல்படும் சில ஓட்டல்களில் முறைப்படி விலைப்பட்டியல் இல்லை.சாலையோர டிபன் கடைகளில் உணவின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள், அதிக விலை என்ற புகார்களால் பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.
சுற்றுப்புறங்களில் சுகாதாரம் இல்லாமலும், மாஸ்க், சானிடைசர் போன்ற வசதிகள் இன்றியும் உணவு பறிமாறப்படுகின்றன.பெரியோர்கள், குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் சுகாதாரதுறை, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE