மதுரை:பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய, 80 பேரில் நால்வர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸ் உதவியுடன் சுகாதாரத்துறை தேடுகிறது.
பிரிட்டனில் இருந்து, எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு மரபணு மாறிய கொரோனா வைரஸ் பரவி விட்டது. கடைசி. 30 நாட்களில் அங்கிருந்து இந்தியா திரும்பியவர்களை சுகாதாரத்துறை தேடிப் பிடித்து தனிமைப்படுத்துகிறது. கொரோனா பரிசோதனையும் மேற்கொள்கிறது.ஒரு மாதத்தில் மதுரை மாவட்டத்திற்கு, 80 பேர் பிரிட்டனில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 76 பேரை சுகாதார துறை தனிமைப்படுத்தியுள்ளது. நான்கு பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீஸ் உதவியுடன் நால்வரையும் தேடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE