நாகப்பட்டினம்:சுனாமியின் கோரத்தாண்டவத்தில், 6,065 பேரை பறிகொடுத்த நாகை மாவட்டத்தில், 16 வது ஆண்டு சுனாமி தின நிகழ்ச்சிகள் நடந்தன.
நாகை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்துாபியில், அமைச்சர் மணியன், கலெக்டர் பிரவின் நாயர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உட்பட கடலோர கிராம மீனவர்கள், மாணவ,மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பின்னர் கடல் நீரில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். வேளாங்கண்ணியில் திரளான மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE