கோவை:கோவையில், 135 பேர் கொரோனா குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் நேற்று புதிதாக, 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு 51 ஆயிரத்து 884 ஆக உயர்ந்தது. கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 46 வயது ஆண், 62 வயது முதியவர், நேற்று உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை, 645 ஆக உயர்ந்தது.அரசு மருத்துவமனை இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவ மனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த, 135 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 50 ஆயிரத்து 369 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 870 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE