திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம்,குஜிலியம்பாறை ஒன்றியம் வாணிக்கரை ஊராட்சி துணைத்தலைவர் பெருமாயி. இவரும்,3மற்றும் 6வது வார்டு உறுப்பினர்களும் ஆதிதிராவிடர் சமூகத்தினர்.
நிர்வாகம் பொறுப்பேற்று ஓராண்டில் முறையான கூட்டங்கள் நடக்கவில்லை. தீர்மானங்களில் கையெழுத்து போடத்தான் அனுமதிக்கின்றனர்.கூட்ட நேரத்தில் தரையில் அமர வைக்கின்றனர் எனக்கூறி, கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, துணைத்தலைவர் பெருமாயிஉட்பட பலர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE