கூடலுார் : லோயர்கேம்ப் குடியிருப்புகளில் கூட்டமாக செல்லும் குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கூடலுார் நகராட்சியில் 21 வது வார்டாக உள்ளது லோயர்கேம்ப். தமிழக- கேரள எல்லையான குமுளி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வனவிலங்குகள் தொந்தரவு அதிகம். குமுளி மலைப்பாதையில் வாகனங்களில் செல்பவர்களும், வழிவிடும் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களும் குரங்குகளுக்கு உணவு வழங்குவது வழக்கம். சீரமைப்பு பணிக்காக போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் உணவுக்காக ஒட்டுமொத்த குரங்குகளும் லோயர்கேம்ப் குடியிருப்புகளை நோக்கி படைபெயடுத்து வருகின்றன.
இதனால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குரங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE