மூணாறு, : கேரளா மூணாறில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் குவிந்ததால் சுற்றுலா பகுதிகள் வாகன நெரிசலில் சிக்கித்தவித்தன.
இங்குள்ள சுற்றுலா பகுதிகளான மாட்டுப்பட்டி அணை, எக்கோ பாய்ன்ட், குண்டளை அணை, டாப் ஸ்டேஷன், ராஜமலை ஆகிய பகுதிகளில்இரண்டு நாட்களாக காலை முதல் பயணிகளின் வருகை இருந்ததால் வாகன நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்தன. நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் பயணிகள் அவதிப்பட்டனர். இரு நாட்களாக தங்கும் விடுதிகள் ஹவுஸ் புல்' ஆனதால் பெரும்பாலானோர் அறைகள் கிடைக்காமல் திண்டாடினர்.
கொரோனாவால் முடங்கிய சுற்றுலா தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் சில தங்கும் விடுதிகள் கட்டணம் உள்பட பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. ஆனால் பெரும்பாலான விடுதிகள் சுற்றுலா வழிகாட்டிகளின் உதவியுடன் அதிக கட்டணங்களை வசூலித்ததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE