திருப்பூர்:'அனைத்து கடைகள், தொழிற்சாலைகளில், தமிழ் மொழியில் தான் பெயர் பலகை இருக்க வேண்டும்' என, தமிழ் வளர்ச்சித்துறையினர் தெரிவித்துள்ளனர்.'தமிழகத்தில் உள்ள கடை, நிறுவனம் மற்றும் உணவு நிறுவனங்களின் பெயர் பலகை, தமிழில் இருக்க வேண்டும்' என, தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது. அதன்படி, பெயர் பலகையில், தமிழ் எழுத்து பெரிய அளவில் எழுதப்பட வேண்டும். அடுத்ததாக, ஆங்கிலம் சற்று சிறிய அளவிலும், பிற மொழிகள், அதைவிட சிறியளவிலும் இருக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை பெரும்பாலான கடைக்காரர்கள் பின்பற்றுவதில்லை.தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்க, கடை உரிமையாளர்கள் முன்வர வேண்டும். தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE