பல்லடம்:போலீசார் முன்னறிவிப்பின்றி நடத்திய, அவசர குறைதீர்ப்பு கூட்டம், மக்களுக்கு பயனளிப்பாக இல்லை. பல்லடம் போலீசார் சார்பில், சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.பொதுமக்கள் கூறியதாவது:பல்லடம் பகுதியில், 24 மணி நேர மது விற்பனை, சூதாட்டம், போதை பொருள் விற்பனை மற்றும் போக்குவரத்து நெரிசல் என, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் என்.ஜி.ஆர்., ரோடு, ஆக்கிரமிப்பின் பிடியால், நெரிசல் மிகுந்த பகுதியாக மாறியுள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வுகாண எந்த துறையும் முன்வருவதில்லை. இதுகுறித்து பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கையில்லை. இச்சூழலில், சிறப்பு முகாம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியே.இவ்வாறு, அவர்கள் கூறினர்.போலீசார் நடத்திய சிறப்பு முகாமில், பொதுமக்கள் ஆர்வம் காட்டாத நிலையில், ஆட்டோ ஓட்டுனர், வியாபாரிகள் சிலர் பங்கேற்று, புகார் மனு அளித்தனர். வரும் நாட்களில், இதுபோன்ற சிறப்பு முகாம் நடத்தும் முன், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதேபோன்று தான், மாவட்டம் முழுக்க உள்ள மற்ற போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது; மக்களின் வரவேற்பு பெறவில்லை. போலீசார் கூறுகையில், 'முகாம் நாளுக்கு முந்தின நாள் இரவு தான், முகாம் நடத்தப்படுவது குறித்த அறிவிப்பு வந்தது. இதனால், அவசர கதியில் ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE