திருப்பூர்:திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடையை நபரை, போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், வடக்கு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசார் ரோந்து மேற்கொண்டனர். திருப்பூர் பி.என்., ரோட்டில் சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரை விசாரித்தனர். அவர், அனுப்பர்பாளையம், கவிதா லட்சுமி நகரை சேர்ந்த குமார், 28 என்பதும், பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது.ஜாமினில் வெளியே வந்த நிலையில், கடந்த ஓராண்டாக கோர்ட்டில் ஆஜராகாமல், தலைமறை வாக இருப்பதும், விசாரணையில் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த, 2 'லேப்டாப்'களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE