கோவை:தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை பிரிவு, தமிழ்நாடு விமான தேசிய மாணவர் படை பிரிவு சார்பில் துாய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் முதல் சுங்கம் ரவுண்டானா வரை நேற்று துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த, 150 தேசிய மாணவர் படையினர் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
தேசிய மாணவர் படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்சாண்டர் கூறுகையில், ''பிளக்கிங் என்ற முறையில் நடந்த இப்பணியில், மாணவர்கள் அதிவிரைவாக குப்பை சேகரித்தனர். ''குளங்கள், பஸ் ஸ்டாண்ட், ரோட்டின் ஓரங்களில் இருந்து, ஒரு டன் குப்பை சேகரிக்கப்பட்டது,'' என்றார்.தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை கமாண்டிங் அலுவலர் லெப்டினட் கர்னல் கிரிஸ் பார்தன் தலைமை வகித்தார். தேசிய மாணவர் படை அலுவலர்கள் ஆல்பர்ட் அலெக்சாண்டர், ஷாம் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE