கோவை:கோவை, அவிநாசி ரோட்டில் நடந்து வரும் மேம்பால பணியை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் முருகேசன், நேற்று ஆய்வு செய்தார்.கோவை, அவிநாசி ரோட்டில், கொடிசியா சந்திப்பு முதல் விமான நிலையம் வரை மேம்பால பணி நடந்து வருகிறது. நேற்று கே.எம்.சி.எச்., சந்திப்பு முதல் பாரத் பெட்ரோல் பங்க் வரை துவக்கப்பட்டது. ஆய்வு செய்த தலைமை பொறியாளர், 'சாலை பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும்; பணிகளை தரமாக மேற்கொள்ளவும், போக்குவரத்துக்கு தடையின்றி, இருபுறங்களிலும் உள்ள, பேவர் ப்ளாக் கற்களை அப்புறப்படுத்தி, சாலையை அகலப்படுத்த வேண்டும். மின் வாரியம், மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்துத்துறை, தொலைத்தொடர்பு துறையினருடன் ஒருங்கிணைந்து, சாலையில் உள்ள குழாய்கள், கேபிள்களை மாற்றியமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்தினார்.மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிகள் அருகில், பாதசாரிகள் சென்று வர வசதியாக, தடுப்புகள் அமைக்க வேண்டும். பணி முடிந்த இடங்களில், குழிகளை உடனடியாக, மூடவும் அறிவுறுத்தினார். கண்காணிப்பு பொறியாளர் சாருமதி, கோட்டப் பொறியாளர் ராணி உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE